தீபாவளி விடுமுறைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக நவ.9,10,11 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையில் இருந்து ( கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர். தாம்பரம், பூவிருந்தவல்லி) 3 நாட்களுக்கு ஏற்கெனவே இயக்கக்கூடிய பேருந்துகளுடன் சேர்த்து 10,975, பிற ஊர்களில் இருந்து 5,920 என மொத்தம் 16,895 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளார்.

அதன்படி * கோயம்பேட்டில் இருந்து மயிலாடுதுறை. அரியலூர், நாகை, திருச்சி, மதுரை, நெல்லைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

* கே.கே.நகரில் இருந்து இ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படும்

* தாம்பரத்தில் இருந்து திண்டிவனம், கும்பகோணம், தி.மலை, நெய்வேலி, தஞ்சைக்கு பேருந்துகள் இயக்கப்படும்

* பூந்தமல்லியில் இருந்து வேலூர், ஆரணி, திருப்பத்தூர், காஞ்சிக்கு பேருந்துகள் இயக்கப்படும்