நாடு முழுவதும் விரைவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் இலவசமாக வழங்குவது குறித்தும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்தும் விரைவில் அரசு அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரேஷன் கடைகளுக்கு லாரியில் அனுப்பப்படும் பொருட்களை இறக்குவதற்காக சுமை தூக்கும் ஊழியர்களுக்கு இறங்கு கூலி வழங்க வேண்டாம் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.