தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் 148 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. பட்டாசு வெடிப்பதற்கு காலை ஆறு மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் எட்டு மணி வரையும் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பட்டாசுகளால் சென்னையின் பல்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் இந்த தீ விபத்துகளில் உயிர் சேதம் மற்றும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.