தி கேரளா ஸ்டோரி படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் இத்திரைப்படம் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இருப்பினும் போதிய வரவேற்பு இல்லாதது மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சனைகளை கருத்தில் கொண்டு கேரளா ஸ்டோரி படம் திரையிடுவதை திரையரங்கங்கள் நிறுத்தி வைத்தன.

இதற்கிடையில் தி கேரளா ஸ்டோரி படத் தயாரிப்பு சுப்ரீம் கோர்ட்டில் இன்று இரு மனுக்களை தாக்கல் செய்திருக்கிறது. அதில் தமிழகத்தில் திரையரங்குகளில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதற்கு ஏதுவாக உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடவேண்டும். அதோடு மேற்கு வங்க அரசு படத்துக்கு விதித்த தடையை நீக்க கோரியும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.