பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சீராக 2 -3 நாட்கள் ஆகும் என நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் கூறியுள்ளார். நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பெரிய பாதிப்பு இல்லாத இடங்களில் மின் இணைப்பு கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதோடு, மழை நீர் நிற்பதால் வடிகால் பணிகளுக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் என்று கூறினார்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை, வெள்ளம் மற்றும் பேரிடர் சம்பந்தப்பட்ட புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1077, 044 27664177, 044 27666746, ص 9444317862, 949890 எண்களில் மக்கள் புகார் தெரிவிக்கலாம். இவை 24 மணி நேரமும் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கட்டுப்பாட்டறையில் இயங்கும்