கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25 வயதிலும் பெண் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம் பெண்ணிடம் அதன் நிறுவனத்தின் உரிமையாளரின் மகன் ரோகித் அடிக்கடி பேசி வந்தார். இந்நிலையில் ரோகித் இளம்பெண்ணிடம் நான் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம் பெண் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறினார்.

அதனை ஏற்க மறுத்து ரோகித் இளம்பெண்ணை அடிக்கடி தொந்தரவு செய்தார். இதற்கிடையே இளம் பெண்ணுக்கும் வேறு ஒருவனுக்கும் திருமணம் நடத்த நிச்சயம் செய்யப்பட்டது. இதனை அறிந்த ரோகித் இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரோகித்தை கைது செய்தனர்.