நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் அர்ஜுன் பிரபு(24) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதி அர்ஜுன் பிரபுவுக்கு மகாலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று அர்ஜுன் தனது வீட்டிற்கு முன்பு கம்பியில் காய போட்டிருந்த துணிகளை எடுத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கம்பி மேலே சென்ற மின் ஒயர் மீது பட்டது. அந்த கம்பியை பிடித்தபோது மின்சாரம் தாக்கி அர்ஜுன் தூக்கி வீசப்பட்டார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அர்ஜுன் பிரபுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.