பொதுவாகவே திருமணம் முடிந்ததும் புது பெண்ணை மணமகன் வீட்டுக்கு அழைத்து செல்வது தான் வழக்கம். ஆனால் இங்கு அவருடைய முன்னாள் கணவரையும் புது மாப்பிள்ளை அழைத்து வந்துள்ளார். கிரிஷ் என்ற 36 வயது பெண் முதல் கணவரிடம் விவாகரத்து பெற்ற நிலையில் இரண்டாவதாக ஜேம்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்து கொள்ளும் முன்பு ஜேம்ஸ் ஆம்ஸ்ட்ராங் இடம் கிரிஷ் கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார். அதாவது திருமணம் முடிந்த பிறகு தன்னுடைய குழந்தை பருவ நண்பரும் முன்னாள் கணவருமான பிரண்ட்ன் என்பவரை தன்னுடன் அழைத்து வருவேன் என்று கண்டிஷன் போட்டு உள்ளார்.

மனைவியின் கண்டிஷனுக்கு அவர் சம்மதம் தெரிவித்த நிலையில் திருமணம் முடிந்ததும் அவரது முன்னாள் கணவரையும் அழைத்து வந்துள்ளார். இதன் பின்னால் இருக்கும் காரணம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அதாவது கடந்த 2006 ஆம் ஆண்டு க்ரிஷ் தனது நண்பரை திருமணம் செய்து கொண்ட நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் கணவர் கார் விபத்தில் சிக்கிய நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டதால் ஆரம்பத்தில் அவருடன் வாழ்க்கை கழித்து விட நினைத்துள்ளார்.

ஆனால் நாளடைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் வந்த நிலையில் முதல் கணவரை விட்டு வர மனமில்லாமல் விவாகரத்து செய்துவிட்டு சட்டபூர்வமாக அவருக்கு பாதுகாவலராக இருக்க முடிவு செய்துள்ளார். அதன் பிறகு ஜேம்ஸ் உடன் காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் செய்து கொண்ட நிலையில் தன்னுடைய முன்னாள் கணவரையும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். மனைவியின் முன்னாள் கணவரை அழைத்து வந்த புது மாப்பிள்ளைக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.