திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு தரிசன டிக்கெட் முன்னரே வெளியிடப்பட்டு வரும் நிலையில் டிசம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ள நிலையில் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு  www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.