திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து வருகிறது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடைபாதை வழியாக பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இலவச திவ்ய தரிசன அனுமதி இன்று முதல் அளிக்கப்படுகிறது. அளிப்பரி, ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக செல்பவர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டது. கொரோனா காரணமாக இந்த நடைமுறை இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மீண்டும் பாதையாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.