துருக்கி நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக குடிப்புக்குவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவும் இதை தடுப்பது பெரும் சிக்கலாக இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 35 ஆயிரம் பேர் துருக்கி நாட்டிற்கு புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களை கைது செய்த அரசு 16 ஆயிரத்து 18 பேரை நாடு கடத்தி உள்ளதாக  தெரிவித்துள்ளது.

துருக்கியில் திருட்டுத்தனமாக  குடியேறுபவர்களை தடுக்க கடற்கரை பகுதிகளில் சுற்றுலா படகுகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் இஸ்தான்புல் நகரில் நடமாடும் புலம் பெயர்ந்தோர் மேலாண்மை அலுவலக மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த மையம் மூலமாக புலம்பெயர்ந்தோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு உள்துறை மந்திரி அலி யெர்லிகாயா கூறியுள்ளார்.