திமுகவின் 15 மாவட்டங்களைச் சேர்ந்த முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த கூட்டம்தான் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இருந்தது.

திருச்சிக்கும், திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு என தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு நாளும் 10 வீடுகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் எடுத்து வரும் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.