புலவர் செந்தலை ந.கவுதமன் மனைவி செகதாம்பாள் என்ற உலகநாயகி (62) உடல்நலக்குறைவு காரணமாக  காலமானார். தமிழுணர்வு கொண்ட இவர் தனது இயற்பெயரை உலகநாயகி என மாற்றி கொண்டார். சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட இவர், திராவிட கொள்கையை முழுமையாக கடைபிடித்தவர். அவரது கணவர் செந்தலை ந.கவுதமன், கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஆவார். இவரது பேச்சுக்கு என்றே தனி பட்டாளம் இருக்கிறது. திராவிட கருத்தை மக்களிடம் கொண்டு சென்றதில் முக்கிய பங்கு உண்டு.