தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று உள்ளது. தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.