தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு அதன் டிரைலர் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த டிரைலரில் கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல்போய், பிறகு அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர் என காட்சிகள் அமைந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்திரைப்படத்தில் நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை அதா சர்மா செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது “படத்தின் மீது நீங்கள் அன்பும் ஆதரவும் காட்டி இருக்கிறீர்கள். இப்போது கட்டாய மதமாற்றத்தில் பாதிக்கப்பட்டு உண்மையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இளம்பெண்களின் பின்னணியை பற்றி கவனித்து கேளுங்கள் என கூறினார். மேலும் படத்தில் வரும் நிமா என்ற பெண்ணின் வேடம் குறித்து குறிப்பிட்ட  அதா சர்மா, அவர் தினசரி 15-20 பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறார்.

அதற்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய முற்படுகிறார். எனினும் அதற்கு அவர்கள் சான்று கேட்கின்றனர். இது தொடர்பாக சர்மா கூறியதாவது 15 பேர் 1 மாதத்திற்கு தொடர்ச்சியாக உங்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் எனில், நீங்கள் என்ன சான்று தருவீர்கள்..? ஷாலினி (சர்மா) காதலில் துரோகத்துக்கு ஆளாகிறாள். காதலில் துரோகம் செய்யப்பட்டதற்கு எவ்வாறு வழக்குப்பதிவு செய்ய முடியும்? என்று கேட்டுள்ளார்.