இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளின் படிப்புக்கு மட்டுமல்லாமல் திருமணத்திற்கும் அதிக அளவு பணம் தேவைப்படுகின்றது. இதனால் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் கவலை இருக்கும். அவர்களுக்கு உதவும் வகையில் எல்ஐசி கன்யாதான் என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக பயனர்களுக்கு 17 லட்சம் ரூபாய் வரை வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் இணைய விரும்பும் பெண் குழந்தையின் வயது 1 ஆகவும் , தந்தையின் வயது 30 ஆகவும் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் இணைந்த பிறகு நாள் ஒன்றுக்கு 121 ரூபாய் வீதம் ஒரு மாதத்திற்கு 3600 செலுத்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 25 ஆண்டுகள் செலுத்தினால் திட்டத்தின் முடிவில் 27 லட்சம் ரூபாய் பெறலாம். இதில் நீங்கள் செலுத்திய பணம் பத்து லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாகும், 17 லட்சம் ரூபாய் வட்டியாகும். இந்த திட்டத்தின் மூலம் சேமிக்கப்படும் பணத்தை 13 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ள முடியும்.