தமிழக முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் 18 வது வார்டு மற்றும் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காந்தி நகரில் வாக்கு இயந்திரம் செயல்படவில்லை. இதனால் அங்கு சற்று நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாக்கு செலுத்த ஆவலுடன் வந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.