நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர், தொகுதி பொருளாளர் என முக்கிய நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் சீமானின் மனைவி கயல்விழியின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், கட்சியின் கட்டமைப்பு தொடங்கி, நிர்வாகம், வேட்பாளர் தேர்வு என அனைத்திலும் அவர் தலையீடு அதிகமாக உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.