பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் பாதல் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரான இவருக்கு வயது 95. இரைப்பை அலர்ஜி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் உடல் நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் குணமடைவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.