உத்தரப்பிரதேசம் அயோத்தியில் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பேருந்தும், லாரியும் அதிவேகமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் பேருந்து லாரிக்கு அடியில் புதைந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.