அஜித் நடித்த விஸ்வாசம், விஜய் நடித்த மெர்சல் மற்றும் தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர்தான் நடிகை சுரேகா வாணி. இவர் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் மொட்டை அடித்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சமீபத்தில் திருப்பதி சென்ற இவர் அங்கே மொட்டை அடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. நடிகை சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா கடந்த 2019 ஆம் ஆண்டு காலமானார். கணவர் மறைவுக்குப் பிறகு மகளுடன் சுரேகா வாணி தனியாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.