ஈரோடு அரசு மருத்துவமனை எதிரே தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிலர் மருத்துவமனையின் 5+வது மாடியில் சிகிச்சை பெற்று வரும் உறவினர்களை பார்ப்பதற்காக லிப்டில் பயணம் செய்தனர். அந்த லிப்ட் இரண்டாவது மாடிக்கு சென்றபோது திடீரென பழுதாகி நின்றதால் அவர்கள் பதற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே மருத்துவமனை நிர்வாகத்தினர் லிப்ட்டை பழுது நீக்குபவர்கள் மூலமாக சரி செய்ததால் 20 நிமிடங்களுக்கு பிறகு அதிலிருந்த 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.