ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு கோதாவரி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பீபி நகர் என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் கூறியதாவது, ரயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் பயணிகள் அனைவரும் காயம் இன்றி நலமுடன் இருக்கின்றனர். இதனை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோதாவரி ரயில் தடம் புரண்டதால் அந்த வழியாக செல்லக்கூடிய ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ரயில்கள் பீபி நகர், புவனகிரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திடீரென தடம் புரண்ட கோதாவரி விரைவு ரயில்… ரயில் சேவைகள் பாதிப்பு…!!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more