ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு கோதாவரி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பீபி நகர் என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் கூறியதாவது, ரயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் பயணிகள் அனைவரும் காயம் இன்றி நலமுடன் இருக்கின்றனர். இதனை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோதாவரி ரயில் தடம் புரண்டதால் அந்த வழியாக செல்லக்கூடிய ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ரயில்கள் பீபி நகர், புவனகிரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திடீரென தடம் புரண்ட கோதாவரி விரைவு ரயில்… ரயில் சேவைகள் பாதிப்பு…!!!!
Related Posts
கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் ஓராண்டாக, ஆயிரத்து 24 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அவர்களுக்கு சுவாசக் குழாய் தொற்று,…
Read moreபயணிகளே…! ரயில்களில் கடைபிடிக்கப்படும் இந்த விதி தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்யும் வசதி ஒன்று உள்ளது. கீழ் பெர்த், மேல் பெர்த், சைடு பெர்த் எது வேண்டுமானாலும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு…
Read more