வேலூரில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் பேசியதாவது “பாரதத்தின் தொன்மையான மொழியான தமிழில் பேச முடியவில்லையே என்பதை வருத்தத்துடன் சொல்லி உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் வேலூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிகொண்டிருந்தபோது, மேடை அருகில் இருந்த பெரிய பேனர் ஒன்று திடீரென்று சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பேனர் அருகில் மக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.