இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர் தனக்கு மதுபானம் கொடுத்து பலாத்காரம் செய்ததாக சமூக ஊடகங்களில் பெண் ஒருவர் பதிவிட்டுள்ளார். மும்பையில்  ஹித்திக் ஷா என்ற இளைஞரும் 21 வயது இளம் பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்துள்ளனர். இருவரும் ஒரு இரவில் பார்ட்டியில் கலந்து கொண்ட நிலையில் நண்பர்களுடன் வந்த அவர் அந்த பெண்ணுக்கு மதுபானம் கொடுத்துள்ளார். அதன் பிறகு நண்பரின் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் பிறகு அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிய நிலையில் அந்தப் பெண் போலீசில் புகார் அளித்த நிலையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சமூக வலைத்தளங்களில் நண்பர்களாக பழகும் பெண்கள் யாருடன் பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் தனக்கு நேர்ந்தது போல இனி ஒருவரும் பாதிக்கப்படக் கூடாது என்று அந்த இளம் பெண் கேட்டுக் கொண்டுள்ளார்.