சென்னையில் இருந்து மதுரைக்கு தேஜஸ் விரைவு ரயில் வாரம் ஆறு முறை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து சுமார் ஆறு மணி நேரத்தில் மதுரைக்கு சென்றடையும் விதமாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் சோதனை அடிப்படையில் தாம்பரத்திலிருந்து நின்று செல்லும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் காலை 6:25 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

அதன் பின் தாம்பரத்திலிருந்து 6.27 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு பகல் 12.15 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கமாக மதுரையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.38 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. அதன் பின் தாம்பரத்திலிருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு சென்னை  எழும்பூர் சென்றடையும். மத்திய இணை அமைச்சர் முருகன் இந்த ரயில் சேவையை தாம்பரத்திலிருந்து இன்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.