R.J தமிழ்மணி சாரிட்டபிள் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தக்கூடிய இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாமை மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி பகுதியில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான செல்லூர் கே. ராஜு அவர்களும் R.J தமிழ்மணி சாரிட்டபிள் எஜுகேஷனல் டிரஸ்ட்ன் நிறுவனர் ஜெயந்தி ராஜு அவர்களும் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறியதாவது, R.J தமிழ்மணி டிரஸ்ட் வாயிலாக நடைபெறும் இந்த பொது மருத்துவ முகாமில் பலதரப்பட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கண் சிகிச்சை, முடக்கு வாதம் உள்ளிட்டவற்றிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கபடுவதாக தெரிவித்தார். மேலும் தளபதி விஜய் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை சந்திப்பது வரவேற்கக் கூடியதாகவும், தொடர்ந்து அனைத்து நடிகர்களும் பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.