தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை சார்பாக புதிய வலைதளத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியகத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக ஐந்து நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதி கடிதங்களை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள www.ccfms.tn.gov.in என்ற வலைதளத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர், முனைவர் பழனிவேல் தியாகராஜன் போன்றோர்  கலந்து கொண்டனர். இந்த புதிய வலைதளம் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்களின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை அரசிடம் எளிதாக பகிர்வதை நோக்கமாக வைத்துள்ளது. இந்த மென்பொருள் பல்வேறு தகவல்களை சேகரிப்பதற்கும் நிறுவனங்கள் வட்டம் 2013-ல் விதிமுறைகளை அடையாளம் காண்பதற்கும் அந்தந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் தொடர்புடைய முக்கிய அலுவலர்களுக்கும் தானியங்கி எச்சரிக்கை மெசேஜ் மற்றும் மின்னஞ்சல் செய்திகளை உருவாக்கவும் அதன் மூலமாக விதிமுறைகளை சரி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.