தமிழ் சினிமாவில் ஒருவர் வாழும் ஆலயம், பாட்டுக்கு நான் அடிமை, மதுரை வீரன் எங்க சாமி மற்றும் உதவும் கரங்கள் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சண்முக பிரியன் (69) சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பின் காரணமாக இன்று காலமானார். மேலும் இவ்வாறு 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ள நிலையில் இவர் கதை எழுதினால் படங்கள் வெற்றி பெறும் என்ற காலமும் இருக்கிறது. இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்..