தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், தல அஜித், சியான் விக்ரம், நடிகர் சூர்யா, கார்த்தி, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக வலம் வருபவர்கள் சென்னையில் வசித்து வரும் நிலையில், அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து தஞ்சம் அடைந்தவர்கள் தான். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களுடைய சொந்த முயற்சியால் இன்று முன்னணி கதாநாயகர்களாக உயர்ந்து இருப்பவர்களின் சொந்த ஊர் எது என்று தற்போது பார்க்கலாம்.

அதன்படி தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினியின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் பெங்களூர் ஆகும். அதன் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆகும். இதேபோன்று சீயான் விக்ரமின் சொந்த ஊரும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தான். அதன் பிறகு தளபதி விஜயின் சொந்த ஊர் சென்னை ஆகும். ஆனால் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் காமன் கோட்டை பகுதி. நடிகர் விஜய் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.

அதன் பிறகு பிரபல நடிகர் சிவகுமாரின் மகன்களான நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோருக்கு சொந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டம் ஆகும். நடிகர் அஜித்தின் சொந்த ஊர் ஹைதராபாத். நடிகர் மாதவனின் சொந்த ஊர் ஜார்கண்ட். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகும். நடிகர் சிம்புவின் சொந்த ஊர் மயிலாடுதுறை. நடிகர் தனுஷின் சொந்த ஊர் தேனி மாவட்டம். பிரபல நடிகர் ஜெயம் ரவியின் சொந்த ஊர் மதுரை மாவட்டம். நடிகர் சிவகார்த்திகேயன் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி. பிரபல காமெடி நடிகர்கள் வைகைப்புயல் வடிவேலு மற்றும் சூரி ஆகியோரின் சொந்த ஊர் மதுரை.

நடிகர் விஷ்ணு விஷாலின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம். நடிகர் எஸ்.ஜே சூர்யாவின் சொந்த ஊர் சங்கரன்கோவில். நடிகர் அரவிந்த்சாமியின் சொந்த ஊர் திருச்சி. நடிகர் சமுத்திரகனியின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம். நடிகர் பார்த்திபனின் சொந்த ஊர் சென்னை. இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி யின் சொந்த ஊர் ஈரோடு. நடிகர் பிரகாஷ்ராஜின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் பெங்களூரு. நடிகர் கருணாசின் சொந்த ஊர் தஞ்சாவூர். மேலும் நடிகர் சதீஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆகும்.