தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. இருந்தாலும் பிற மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும் என தெரிவித்துள்ளது. அதன்படி பீகார், கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.