தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். இவர் தன்னுடைய இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைவதாக அறிவித்துள்ளார். இதற்கு தற்போது செல்வப் பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, மன்சூர் அலிகான் தன்னுடைய கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியுடன் இணைவதாக ஒரு கடிதம் தந்துள்ளார். ஆனால் இது தேர்தல் நேரம் என்பதால் தற்போதைக்கு இதை செய்ய முடியாது. இதனால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்குமாறு அவரிடம் கூறியுள்ளோம். மேலும் தேர்தல் முடிவுக்கு பிறகு மன்சூர் அலிகான் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.