அரசின் அறிவுறுத்தலின் படி போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம் கார்டுகளை முடக்கும் பணியில் சைபர் க்ரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் போலியான ஆவணங்கள் மூலம் 52,000 சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றை முடக்க மத்திய தொலை தொடர்பு துறைக்கு சைபர் க்ரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரே நபரின் பெயரில் 400க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளும், குழந்தையின் போட்டோவை பயன்படுத்தி சிம் வாங்கியதும் இன்னும் பல வகையான முறைகேடுகளும் நடந்து சிம் வாங்கியது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 1102 சிம் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ள காவல் துறையினர் சுமார் 56,000 சிம் கார்டுகளை முடக்க மத்திய தொலைதொடர்பு துறைக்கு கடிதம் எழுதி உள்ளனர்.