கோடை விடுமுறையாக தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்கள் அறிவித்துள்ளது. அதன்படி, மே 10 முதல் 24ஆம் தேதி வரை அவர்களுக்கு கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளைப்போல் தங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என கடந்த மாதத்தில், அங்கன்வாடி ஊழியர்கள், அரசுக்கு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அங்கன்வாடி பணியாளர்களாக பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களான முதன்மை அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாவது வாரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மூன்றாம் வாரமும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு நான்காவது வாரமும் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.