ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகளில் பெயர் உள்ள எல்லோரும் ரேஷன் கடைகளில் கைரேகையை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கைரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாத இறுதிக்கு பின் ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொய்யான நபர்களின் பெயர்களை ரேஷனில் வைத்து கூடுதல் பொருட்களை ரேஷனில் வாங்குவது போன்ற குற்றங்களை தடுப்பதற்காக கைரேகையை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.