புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 8 நாள் சுற்றுப்பயணமாக கடந்த ஜன.27ம் தேதி ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின், இன்று காலை சென்னை திரும்பினார். அங்கு, செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்பெயின் பயணம் சாதனை பயணமாக அமைந்ததாக கூறினார். மேலும், முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்தகாவும், ரூ.3,440 கோடிக்கு முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் 400 அல்ல, மொத்தமுள்ள 543  தொகுதிகளையும் கைப்பற்றுவேன் என பிரதமர் மோடி சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடியின் பேச்சை பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன் என்று அவர் கூறினார். மேலும், எதிர்கட்சித் தலைவர்போல காங்கிரசை மோடி விமர்சிப்பதாகவும், அவரது விமர்சனம் தனக்கு புரியாத புதிராக உள்ளதாகவும் சாடினார்