தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) நடந்து முடிந்தது. இதில், பொதுமக்கள் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தினர். நேற்று நடந்த தேர்தலில் மொத்தம் 72.09 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 விழுக்காடும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்று (ஏப்ரல் 20) வெளியாக உள்ளது. 2019ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தம் 71.90 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.