விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசபந்து மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருதுநகர் மாவட்ட மக்கள் வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். அதன் பிறகு கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் பாஜக ஒரு காலமும் காலூன்ற முடியாது என்பது தெரிந்து விட்டால் தமிழக பாஜக கட்சியில் இருப்பவர்களுக்கு ஆளுநர் பதவியை ஆறுதல் பரிசு போன்று பாஜக வாரி வழங்குகிறது.

இந்தியாவில் பல திறமை வாய்ந்த மனிதர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் என பலர் இருக்கும் நிலையில் பாஜக கட்சியில் இருப்பவர்களை மட்டுமே ஆளுநராக மத்தியில் ஆளும் பாஜக அங்கீகரித்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.‌மேலும் அதானியின் ஏஜெண்டாக மோடி அரசு செயல்படுகிறது என்றும் விமர்சித்தார்.