காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை  கட்டுப்பாட்டில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியில் காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி இடைநிலை ஆசிரியர்கள் பணியில் 12 பணியிடங்களும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் 4 இடங்களும், பட்டதாரி ஆசிரியர் பணியில் 2 இடங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 3 இடங்களும் மொத்தம் 21 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீ பெரும்புதூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது.