பாஜக எத்தனை தொகுதிகள் வேண்டுமானாலும் கேட்கலாம், அது அவர்கள் விருப்பம். ஆனால், அதை முடிவு செய்ய வேண்டியது நாங்கள் தான் என அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார். அதோடு, கர்நாடகாவில் பாஜக கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது ஒரு துயரமான நிகழ்வு என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதை அதிமுக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்குள்ள ஷிவமொக்காவில் பாஜக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அப்போது திடீரென்று ஒலித்துக் கொண்டிருந்த தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஆனது நிறுத்தப்பட்டது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.