தமிழகத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் நேற்றுடன் அதற்கான கால அவகாசம் முடிவடைந்தது. இதனிடையில் இணையதளம் சரியாக வேலை செய்யாததால் தமிழக விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதன் பேரில் வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கால அவகாசத்தை தமிழக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.