தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் அகல விலை படி மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். கூட்டுறவு சங்க பதிவாளர் உடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனிடையே ரேஷன் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள்,எடையாளர் மற்றும் இளநிலை உதவியாளர் ஆகியோர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கூட்டுறவுத் துறை மண்டல இணை பதிவாளருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் மண்டல இணை பதிவாளருக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதாவது தங்கள் மண்டலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட பதவி உயர்வு குறித்த விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவரத்தின் அடிப்படையில் பதவி உயர்வு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.