நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் காத்து கிடந்தனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி 2000 மற்றும் 200 ரூபாய் புதிய நோட்டுக்களை வெளியிட்டது.

இதனை தொடர்ந்து கடந்த ஆறு வருடங்களாக புதிய 2000, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை பலரும் வாங்க மறுத்து வருகின்றனர். மற்ற இடங்களை தொடர்ந்து தமிழக ரேஷன் கடைகளில் மக்களிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதாக புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர், ரேஷன் கடைகளில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட காலம் வரை 2000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம். ரேஷன் கடைகள் மட்டுமல்லாமல் பிற கடைகளிலும் செப்டம்பர் 30ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம் எனவும் கூட்டுறவு வங்கிகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.