தமிழகத்தில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரேஷன் கடைகளை முறையாக திறக்க வேண்டும் என ஏற்கனவே ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும் என்றும் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.