தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்தவேண்டும் எனும் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது “இளம் விளையாட்டு வீரர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்த ஒரு தளமாக செயல்படும். அதோடு தமிழ்நாடு கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளையும் தகுந்த கம்பீரத்தோடு நடத்துவோம். தமிழ் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்துவோம் என கூறினார்.