தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி. நர்சிங் , பி.ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 10) கடைசி நாள் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே உடனே விண்ணப்பிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே  கடைசி நாள்.

இணைய வசதி இல்லாத மாணவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவ‌ கல்லூரிக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள இணையதள உதவி மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் . மேலும், விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள்  https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.