தமிழகத்தில் சென்னை மாநகரில் குடிநீர் வாரியம் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பாக 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. குடிநீர் வாரியம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி மூலமாக தினந்தோறும் 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. இதனை தொடர்ந்து ஆண்டு தோறும் குடிநீர் வாரியம் சார்பாக வீடுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 2023 -24 ஆம் நிதியாண்டில் வீடுகளுக்கு 5%, வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 10 சதவீதமும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான கட்டணத்தை  மார்ச்  31ஆம் தேதி செலுத்த வேண்டும் என குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் வரி செலுத்த வசதியாக அலுவலகங்கள் சனி மற்றும் ஞாயிறு என அனைத்து நாட்களில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.