மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படாத நிலையில், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போதுமான இடவசதி, பேராசிரியர்கள், பயிற்சி செய்ய வசதி இல்லாததை சுட்டிக்காட்டி, தங்களை வேறு எய்ம்ஸ் கல்லூரிக்கு மாற்ற வேண்டும் அல்லது ஜிம்பர் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று வட மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது பேட்டியளித்த அவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.