தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணத்தை 40 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்துவதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் தற்போது 40 லட்சத்திலிருந்து 50 லட்சம் ஆக உயர்த்தப்படும் என பட்சத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு நடப்பு நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பழைய விகிதபடி வீடு கட்டுவதற்கான முன்பணத்தை பெற ஒப்புதல் கிடைக்கப்பெற்று ஒரு தவணை தொகை கூட பெறாதவர்களுக்கு புதிய உயர்த்தப்பட்ட விகிதம் பொருந்தும். அவர்கள் 40 லட்சத்திற்கு பதிலாக 50 லட்சம் வரையில் முன்பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். முன்பணத்திற்காக விண்ணப்பித்து உள்ளவர்களுக்கும் வீட்டை கட்டி முடிக்காதவர்களுக்கும் புதிய உயர்த்தப்பட்ட விகிதம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.